Thursday, April 19, 2012

மாயை என்கிற மாயை

மாரியம்மனுக்கு
விழாக் கொடியேற
பின் பெய்யும் மழை போல்

நான் தனித்திருந்ததாய்க்
கிடந்த பொழுதுகளில்
மாயையுடன் கூடிய
கனத்த மழை
மனதில்

எந்த விதையையும்
வளரவிடாத
பாறையின் ஆதிக்கத்தில்
மழை மட்டும்
என்ன செய்யும்

மாயை
மற்றொரு வகை மாயையாக
மாற்றம் பெறாமலே
வெளியேறிக் கொண்டிருக்கிறது
பின்னொரு நாள்
உன் அருகாமையில் !!!