அழகும்
அழகு சார்ந்த
அனைத்தும் ஆனவள் ....அவள்.!
கவிதைக்கு அடுத்த பரிமாணத்தில்
ஏதாவது எழுத முடியும்
அவள் அழகியல் பற்றி..!
============================================
அழகிய அவள்
என் தமிழ் பாடநூல்..!!
கண்ணிற் கருவிழி
கடவுள் வாழ்த்து..!!
செந்நிற முகம்
செய்யுள் பகுதி..!!
இமைகள் இரண்டும்
இலக்கிய இலக்கணம் .!!!
உதடுகள் சிரித்தால்
உரைநடைப் பகுதி..!!!
மனந்திறந்து பேச
மனப்பாடப் பகுதி ..!!!
=============================================
ஒரு டிசம்பர் மாத
விடுமுறை நாளில்,
எல்லா காதலர்களையும்
போல நம்மையும்
விருந்தினராக
வரவேற்றது அந்த
விருதுநகர் பூங்கா..!
அனைத்து நதிகளையும்
இணைத்த' இந்தியா போல
செழிப்பாக
சிரித்துக்கொன்டிருந்தாய் நீ!!!
மரத்தடி நிழல்
மழைக்காலப் புல்வெளி,
அருகே மைதானத்தில்
கிரிக்கெட் ஆடும் சிறார்களென..,
அனைத்தையும் மறந்து...,
நான் உன்னை மட்டுமே
ரசித்துக்கொண்டிருக்க.....!
நீயோ....,
கணித பாட நூல்,
கால்குலேட்டர்,
என
ஒரு நாளிற்கான
வகுப்பறையை
தயார் செய்து கொண்டிருந்தாய்...!
என்னை மாணவனாக்கி.......!!
--------------------------
நான் , நீ , ஒரு பூங்கா வோடு
டிசம்பர் மாதம்
ஒவ்வொரு வருடமும் வரும்!!!
வாழ்க்கையில் இனி - திரும்பி
வரவே வராத நிமிடங்களை
வெறும் நினைவுகளாக்கிச் சென்று போகும்!!!