முடி திருத்துபவனின்
முக மொழி
முகத்தோடு
பேசித் தீர்த்த
மௌனத்தை....
சிவமந்திர் வாசலில்
பூக்கள் விற்கும் பள்ளிச்சிறுமி
ஒருநாள்
அரசு பூங்காவில்
அரளிப் பூக்கள்
பறித்துக் கொண்டிருந்ததை...
பயன்பாட்டில் இல்லாத
பழைய கணினிக்குப்பைகளை
அள்ளிச்செல்லத் தயங்கிய
பிச்சைக்காரப் பாட்டியையும்
அவள் விழிகள்
எழுப்பிய வினாக்களையும்....
புறப்படும் பொழுதில்..,
சோறு போட்டுப் பழகிய
தெரு நாயிடம்
சொல்லிப் பிரிய
பாஷைகள் அற்று நின்றதுபோல்...
...........................................................
பதிய முடியாமல்
போனது பல!!!
No comments:
Post a Comment