Friday, December 21, 2012

இனிமேல் உலகம் அழியாது !!!

எங்கள் நிலங்களில்
வெட்டிப் பிடுங்கி எரிய
பச்சை மரங்கள்
மிச்சம் இல்லை..!

எங்கள் வயல்களில்
விவசாயப்
பயிர் விதைக்க
உயிர் மண் இல்லை..!

எங்கள் நதிகளில்
அணைகட்ட நீரும் இல்லை,
எங்கள் கரைகளில்
அள்ளிக்கட்ட மணலும் இல்லை
( நதிகளே இல்லை )..!!

நாங்கள் ஆக்சிஜனை
சுவாசித்தே
வருடங்கள் பல ஆகிவிட்டது..,

எங்கள் உலகம்
ஏற்கனவே அழிந்துவிட்டது...

எஞ்சியிருக்கும் சில பிணங்கள் மட்டும்
இன்ன பிற அழிக்கிறோம்...!!!

No comments:

Post a Comment