Tuesday, September 4, 2012

அய்யனார் (யார்) ??


                                                     ( Poto by Thyaharajan Jagadeesan )

பெரிய தொப்பை அய்யனார் கையில் சின்ன அரிவாள்
ஒல்லி மீசைக்கார சுடலை மாடன் கையில் பெரிய அரிவாள் !
முதிய சிற்பி மறந்துபோன முரண்பாட்டை
யார் மாற்றப் போவது ??


சாலையை  வாசல்
ஆக்கிரமித்த வீடுகளில்
எப்படி வளரும்
நேத்திக் கடனுக்கு
நாட்டுக் கோழியும்
ஆட்டுக் குட்டியும் ??

நவீன தமிழ்ப்பெயர் சூட்டும்
'வடமொழி எல்லைகளுக்குள்'
வர முடியுமா
கருப்பசாமியும் முனீஸ்வரனும்???

மதுரை வீரன் , மாடசாமி
கூடவே நின்றாலும் குழந்தைகள்
விளையாடப் பொம்மையேயாகும்
குதிரையும் நாயும் -இனி
எப்படிக் கடவுளாகும் ??

விளையா நிலங்கள்
'ரியல் எஸ்டேட்க்கு'
விலை போன
வேலிகளுக்குள் -இனி
எப்படி வேட்டைக்குப் போக முடியும்
கோட்டைச்சாமி ??

அய்யனாரை
எப்படிப் புரிந்து கொள்ளும்
எதிர்காலம்??

No comments:

Post a Comment