Sunday, August 5, 2012

நவீனத்தின் மீதான பிரக்ஞை


முன் அறிந்த 
அளவுகளின் முனைகளில் 
அமர்வதில்லை 
என் புதிய 
ஓவியத்தின் தோற்றம் !!

புலன் உணர்த்தும் 
நளினங்களை 
சித்தரிப்பதில்லை 
நான் உடைத்துச் செதுக்கிய 
சிற்பத்தின் ரூபம் !!

யாவரும் எழுதி விட்ட 
வரிகளின் மொழியை 
பேசுவதில்லை 
என் இலக்கணத்துக் 
கவிதை நயம்  !!

களம் இன்றித் தொடங்கி
பின் முடிவதாய் 
தொடரும் 
என் ஆக்கத்துக்
கதையின் காட்சி(கள்) !!

மறுபடியும் 
முதலில் இருந்து
தொடர்தலாகவே முடிவடைகிறது 
நவீனத்தின் மீதான என் பிரக்ஞை...?!!!

No comments:

Post a Comment