Wednesday, January 11, 2012

நெஞ்சு பொறுக்குதில்லை..!!! பாரதி பாடல் "கவி-பெயர்க்கப் பட்டது"

பிடித்த நடிகன் கடவுள் என்பார்
அந்தத்தலை என்பார் இந்தத்தளபதி என்பார்
திரையில் இன்று கூட்டம் காட்டுவார் - நாளை
திருட்டு சீடியை வீட்டில் பூட்டுவார்

ஊழல் அரசியல் வாதி என்பார்

ஊரில் அவர் ஆட்சிக்கே வாக்களிப்பார்
பேருந்து நிறுத்த, இருக்க மனைஇன்றித் தவிப்பார் -
மருந்தும் மருத்துவ மனையுமின்றி மரிப்பார்!!!

பன்னாட்டு அறிவுநுட்பம் கற்றுத் தேர்வார்

அந்நாட்டு ( அமெரிக்க )அடிமைக் கூலியாய் தேர்வாவார்.
உணர்வும் இல்லற உறவும் பகல்கன வென்பார்
உணவும், இல்லாத உடையும் பாவனை என்பார்

இனமினமென்று நித்தமொரு க(வி)தை சொல்வார்

இலங்கையில் யுத்தம் இங்கிருந்தே கதை கேட்பார்
மீனவன் சிறைபட்டு மீளும்வரை காத்திருப்பார்
சேதுகால்வாயா?? செத்து மடியும் மீன்கள் என்பார்

ஆதி மொழி தமிழ் என்பார்

ஆங்கிலமே அகில மொழி என்பார்
ஆழிப் பேரலை அழிக்கும் என்பார்
அனு மின்உலை வெடிக்கும் என்பார்

அஞ்சி அடிமைப் பட்டுச் சாகிறார்..!!


நெஞ்சு பொறுக்குதில்லை - ஆதலால்

பாரதி பாடல்
கவி பெயர்க்கப் பட்டது..!!

No comments:

Post a Comment