Friday, January 20, 2012

ஓர் எழுத்தும்
தனித்துப்
பொருள் தரும் தமிழில் !!

ஒற்றை வார்த்தை
பல வகைப்
பொருள் கொள்ளும் தமிழில் !!

யாப்பும் பாவும்
குறளும் காப்பியமும்
கூடிய யாவும் கற்றும்....,
ஆயினும் ...

குழந்தையின் மழலையில்
மட்டுமே புரிந்தது
உயிர் (அ ) எழுத்தின்
உண்மை அர்த்தம்!!

No comments:

Post a Comment