Tuesday, March 13, 2012

மரங்களில் நனைந்து

விரிவாக்கப் படாத சாலை
என்னை
வரவேற்கிறது
இருமருங்கிலும்
வரலாறு
வளர்த்த மரங்களோடு


வெய்யிலை
புள்ளிகளாகத் தந்த
புளிய மரங்கள்
பூக்களைச் சொரிந்து
போட்டிருக்கிறது
புதிய கோலம்

என்னைத்
தொட்டுப்
பின்னிக் கொண்டு
நட்போடு
விளையாடுகிறது
வெட்டப் படாத
கிளைகள்

மரங்களுக்கிடை
நடை போகையில்
மனதிற்குள்
எடை குறைகிறது

ஒவ்வொரு மரமும்
ஒரு கனம்
முயற்சிக்கிறது
என் மனிதம்
மைனாவாக
மாறிப் போக

பாடும் பறவைகள்
வாழும் மரங்களைக்
கடந்து போகும் முன் ..

மரங்களே கட்டுகிறது
என் மனதிற்குள்
வசந்தத்திற்கான கூடு !!!

No comments:

Post a Comment