Wednesday, February 8, 2012

பின்னணி

கடும் வெய்யில்
இலைகளை உதிர்த்தாலும்
கதிரவனோடு
பச்சயத்தை
நிறுத்துவதில்லை
பெரிய மரங்கள்..!!!

அதிக அதிர்ச்சி
அழிப்பேரலை எழுப்பினாலும்
ஆழம் குறைத்து
வறண்டு வற்றிப் போவதில்லை
பெருங்கடல்!!

அழுத்தக்காற்று
மேகங்களைக் கடத்திச்
சென்றாலும்
வெறிச் சோடிப் போவதில்லை
எல்லையற்ற வானம்..!!

மரக் கிளைகள் ,
மலைப் பாறைகள்
மறைக்கும்
வெறும் சன்னல்களுக்குப்
பின்னால் தெரிவதில்லை
இந்தப் பிரபஞ்சமும் பேரண்டமும்..!!!

பெருங் காப்பியங்கள்
நினைவில்
வைப்புது இல்லை
- எழுதப் பட்டபோது
தொலைத்த
ஓரிரு ஓலைகளை ..!!



No comments:

Post a Comment