Friday, February 10, 2012

சின்ன சின்ன கதைகள்

கற்பனையாக
அம்மா சொன்னதில்

பாழ் கிணற்றில் விழுந்த குழந்தையை
பத்துதலை பாம்பு எடுத்து வளர்த்தது ஒரு கதையில் !!!

கடவுள் தான் உலகத்தைப்படைத்து
மழை இடி மின்னல் என கட்டளை இடுவதாக இன்னொரு கதையில்!!!

கொல்லைக்குப் போன பாட்டி
பனைமர ஓலையை பேயென பயந்தது மற்றொரு கதையில்!!

ஆரம்பம் மட்டும் நினைவிலிருக்கும்
இந்த முடிவு மறந்த  கதைகளை

கேட்டு மறந்து போகவில்லை
கேளாமல் உறங்கிப் போயிருப்பேன்..!!

அவள் கூறியதில்..
அறம் வென்றிருக்கலாம்
அன்பு தலைத்திருக்கலாம்..

வார்த்தையில் எழுதி
பாதியில் முடிந்ததை

எந்த இலக்கியத்தில் சேர்ப்பது ??


No comments:

Post a Comment