Wednesday, February 22, 2012

கவிதை??

கருப்பொருள்
அகப்படாத
வெறுமையில்
எத்தனை முயற்சியிலும் 
பிறப்பதில்லை
புதியதாய் ஒரு கவிதை


பெரும் தேடலக்குப் பிறகும்
கூர்மையான
வார்த்தைகளில்
நிரப்ப முடியவில்லை
என் நவீன கவிதைகளை

வரம்பும்
மரபும்
மறந்த
புதிய களத்திற்கு
புலம் பெயர்வதில்லை
என் எழுத்து நடை

ஏதாவது ஒற்றை வரியில்
எதுகையும்
மோனையும்
இல்லாது
எந்த கவிதையையும்
நான் எழுதி முடிப்பதில்லை

ஒரு முறையாது
கனத்த குரலில்
வாசித்துக் காட்டாமல்
பிரசுரிப்பதில்லை
எழுதி முடித்த பக்கங்களை

ஒரு பெருந் திரள்
மத்தியில்
கவிஞர்' என்று
கௌவுரவித்தாலும்

எழுதப் படிக்கத்
தெரியாத
என் சக
இளைஞனுக்குப்
புரியப் போவதில்லை
என் புத்தகங்கள்

No comments:

Post a Comment