Friday, February 10, 2012

டிசம்பர்

ஒரு டிசம்பர் மாத
விடுமுறை நாளில்,


எல்லா காதலர்களையும்
போல நம்மையும்
விருந்தினராக
வரவேற்றது அந்த
விருதுநகர் பூங்கா..!


அனைத்து நதிகளையும்
இணைத்த இந்தியா போல
செழிப்பாக
சிரித்துக்கொண்டிருந்தாய் நீ!


மரத்தடி நிழல்
மழைக்காலப் புல்வெளி,
அருகே,
மைதானத்தில்
மட்டைப்பந்து ஆடும்
சிறார்களென..,

அனைத்தயும் மறந்து
நான் உன்னை மட்டுமே
ரசித்துக்கொண்டிருக்க.....!


நீயோ....,
கணித பாட நூல்,
கால்குலேட்டர்,
என
ஒரு நாளிற்கான
வகுப்பறையை
தயார் செய்து கொண்டிருந்தாய்...!
என்னை மாணவனாக்கி.......!!


நான் , நீ , ஒரு பூங்கா வோடு
டிசம்பர் மாதம்
ஒவ்வொரு வருடமும் வரும்!!!

வாழ்க்கையில் இனி - திரும்பி
வரவே வராத நிமிடங்களை
வெறும் நினைவுகளாக்கிச் சென்று போகும்!!!

No comments:

Post a Comment