Friday, February 24, 2012

இயல்பு நயம்

மானுடத்தடம் நுழையாத
மலைக்குகை இடுக்கு
எவருக்காகவோ
ஒளித்து வைத்திருக்கிறது
ஏகாந்தத்தை

நீந்திச் செல்ல முடியாத
நீர்நிலை ஆழத்தில்
எதற்காகவோ
நிலைத்திருக்கிறது
சலனமற்ற தனிமை

அடங்கிப் போகிடாத
காற்றின் நகர்வு
எல்லாத்
திசைகளின்
மேல்வைத்தது
தீராத பகை

நெருங்க விடாத
சூரியனின் 'எரிச்சல்'
எல்லோரிடமும்
கொண்டிருக்கிறது
தணிக்கமுடியாத கோபம்

இலையுதிர்த்த பருவத்தில்
வேர்களில்
சேமித்த உணவோடு
அடுத்த மழைக்காக
காத்திருக்கிறது
ஒரு மரம்

No comments:

Post a Comment