Friday, February 10, 2012

புதிதாய் உன்னை பற்றி

இந்த வருடத்தின்
மூன்று தினங்கள்
முடிந்தும்...,

இன்னும் எனது
புதிய டைரி
திறக்கப்பட்டு
எழுதப்படவில்லை.!

முதல் பக்கத்தில்
முதல் கவிதை
நீயே
ஆனாலும் ..
உன் பற்றிய நினைவுகளில்
எதனை - பழையது ஆக்கி
புதிதாக
எதை எழுதுவது ???

எதையோ எழுத முனைகிறேன்..
தோராயமாக...



ஆயிரம் மழைத்துளி,
ஒரு நிமிட சிரபொஞ்சி
உன் சிரிப்பு..!!

'அஸ்தம சூரிய வெட்கை'
அவ்வப்போது
-உன் கோபம்..!

'கோடை விடுமுறை
அம்மாச்சி வீடு'
உன் ஆறுதல்..!

காலம் கடக்காமல் கரைகடக்கும்
'தானே' புயல்
உன் புறக்கணிப்பு..!

திரும்ப திரும்ப
வியக்க வைக்கும் உன் தமிழ்..!!

திரும்ப திரும்ப
விரும்ப வைக்கும் உன் திமிர்...!!

இப்படி
இன்னும் பல
எழுதித் தீர்க்க..

No comments:

Post a Comment