Wednesday, February 15, 2012

பேசுபொருள் நீ எனக்கு

பூஜ்ஜிய
இடைவெளி
இயக்கத்தில்
பொருளற்றது
இயற்பியல்

தூரத்திலும்
கண்களால்
பேசியதில்
நுட்பமற்றது
தகவல் தொடர்பு

உயிர் வரை
உரையாடிய
முத்தத்தில்..
மேகமற்றுப்
பொய்த்தது மழை

உடலோடு
விளையாடிய
மொத்தத்தில்
சிற்றோடையில்
வீழ்ந்தது சூரியன்

காற்று அடைபடாத
நெருக்கத்தில்
மொழி அற்றுப்
பிறந்தது
மெய் எழுத்து....

சொல் கூடிய
சிரிப்பொலியில்
தன்னைத் தானே
மீட்டியது
வீணை !!!

தொட்டு உணரும்
பருப் பொருள்
கண்டு உணரா
பரம் பொருள்
ஆனது

பேசு பொருள்
நீயிருக்க
பொங்கும் கவி
நானிருக்க...!!!

No comments:

Post a Comment